Wednesday, August 26, 2015

கோவில்பட்டி கூட்டியக்க பொதுக்கூட்டத்திற்கு அணிதிரண்டு வாரீர்!

நாளை ஆகஸ்ட் 27ல் கொள்கை துலங்கும் கோவில்மாநகரில் மக்கள் நலம் காக்கும் கூட்டு இயக்கம் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டமானது நாளை மாலை 6 மணிக்கு காந்தி மைதனத்தில் நடைபெறுகிறது. மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் அனைத்து தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஸ்ணன், முத்தரசன், துரை ரவிக்குமார், ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள். 

மாற்றத்தை விரும்பும் மக்களே! மக்கள் நலன் காக்கும் கூட்டுஇயக்கதிற்கு ஆதரவு தாருங்கள்! கோவில்பட்டி மாநகரில் பிறவி போராளி வைகோ முழக்கத்தை செவிமடுக்க வாரீர். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் சங்கமிப்பீர். சரித்திரம் படைப்பீர் என ஓமன் இணையதள அணி சார்பாக அனைத்து பொதுமக்களையும், கழக தோழர்களையும், கூட்டியக்க தோழர்களையும் அன்போடு வரவேற்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன் 

No comments:

Post a Comment