Wednesday, August 26, 2015

பெரம்பலூர் மாணவர் மன்ற சசிகுமார்-க்கு திருமண வாழ்த்து!

மதிமுகவின் பெரம்பலூர் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் உயிர் நாடிகளில் ஒருவரான, கழக நிகழ்ச்சிகளில் தவறாது தன் பங்களிபை தருகின்ற, மாணவர் மன்ற நிர்வாகிகளை போல செயல்களை பொறுப்பாக செய்கின்ற திருநிறை செல்வன். சசி குமார் அவர்கள் திருநிறை செல்வி.சம்பூர்ணம் அவர்களை திருமணம் செய்ய இருக்கிறார்கள். அவர்களது திருமணம் பெரம்பலூர், எலம்பலூர் சலையில் அமைந்துள்ள பாலமுருகன் கல்யாண மண்டபத்தில் வைத்து நாளை காலை 27 ஆகஸ்டில் நடைபெறுகிறது. 

சிறப்பு விருந்தினர்களாக, மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ரோவர் கி வரதராஜன் அவர்களும், மதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைராஜ் அவர்களும், செல்ல கதிர்வேல் மாவட்ட அவைதலைவர் அவர்களும், மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் அவர்களும் மற்றும் கழக தோழர்களும், உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

மணமக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment