Tuesday, August 18, 2015

கரூர் தொண்டரணி பயிற்சி நிறைவில் பங்கேற்க புறப்பட்டார் வைகோ!

இன்று காலை அரும்பாக்கம் பசுமைத் தீர்ப்பாயத்தில் திருவைகுண்டம் தொடர்பான வழக்கில் ஆஜராகி விட்டு,தமிழ்நாடு காங்கிரசு தலைவர் இளங்கோவன் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து,அச்சுறுத்தும் வகையில் உருவ பொம்மை எரிப்பு வரை சென்ன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காட்டாச்சி தர்பாரைக் கண்டித்து மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவன் இல்லத்திற்குச் சென்றார்.

அதன் பின்பு நாளை கரூரில் நடைபெறுகின்ற தொண்டரணி பயிற்சி நிறைவு நாள் நிகழ்வில் பங்கு கொள்வதற்காக,திருச்சிக்கு விமானத்தில் செல்வதற்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த தலைவர்,காரில் அமர்ந்தவாறே சிறிது நேரம் சங்கொலி அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். தலைவர் வந்தது முதல் விமான நிலைய ஊழியர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். பின்பு காரை விட்டு இறங்கியவுடன் அவர்களிடம் பேசிய தலைவர்,தானாக அங்கு நின்றிருந்த கட்சித் தோழர்களிடம் 'இவர்களுடன் ஒரு புகைப்படம் எடுங்கள்' என்றார். அது தான் நான் பதிந்துள்ள புகைப்படம்.

செய்தி சேகரிப்பு: தீபன் பழனிசாமி முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment