Monday, August 31, 2015

அமெரிக்க நிலைப்பாடை எதிர்த்து மனு கொடுப்பு, மதிமுகவின் சசிகுமார் பங்கேற்பு!

இலங்கையில் நடந்த இனப்படுகொலையில், மனித உரிமை மீறல் பற்றின விசாரணையை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைபாட்டை 100 மணிநேரத்தில் திரும்ப பெற வேண்டியும் இலங்கையில் சர்வதேச சுதந்திர இனப்படுகொலை விசாரணையை கொண்டு வரவேண்டியும் பல தோழமை இயக்கங்கள் மற்றும் அமைப்புகளால் இன்று சென்னை அமெரிக்க தூதரகத்தில் அமெரிகாவின் நிலைப்பாடுக்கு எதிர்பு தெரிவித்து மனு மற்றும் எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

இதில் மதிமுகவின், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் அமைப்பாளர் சசிகுமார், இளைய தலைமுறை கட்சியின், இனியன் ஜாண், மாறன், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மாணவர் இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கம் சீலன் பிரபாகரன் ஆகியவற்றின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டு மனுவை கையளித்தனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment