Wednesday, August 19, 2015

வைகோவின் ராணுவ கரும்புலிகள் படை காவலில் பொதுச்செயலாளர் இல்லம்!

இளங்கோவனை மிரட்டியதற்காக அரசியல் மாண்பை போற்றும் வகையில் அதிமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைகோ அவர்கள் இளங்கோவன் வீட்டிற்கு சென்று பேசிவிட்டு பத்திரிகையாளர்களை மதிமுக பொதுசெயலாளர் வைகோவும், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கூட்டாகதிமுகவை கண்டித்து பேட்டியளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் தலைவர் வைகோவின் வீட்டை முற்றுகை இடுவதற்காக காவல்துறையில் அனுமதிபெற்றுள்ளதாக தகவல் வந்தன. தலைவர் வைகோ அவர்கள் கரூரில் தொண்டர்படை நிறைவு விழாவில் இருப்பதால் கழக தொண்டர்படை மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் தலைவரின் வீட்டுக்கு முன்பாக குவிந்துள்ளனர். கரும்புலி ராணுவம் போல தொண்டர்கள் திரண்டிருப்பது அதிமுகவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இப்போது வரை எந்த அதிமுகவினரும் அங்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. சகஜமான சூழ்நிலையே உருவாகிறது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment