Friday, August 21, 2015

பினாங்கு துணை முதலமைச்சர் மதிமுக மாநாட்டிற்கு வர விசா கிடைத்தது!

மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் திரு. இராமசாமி அவர்கள் வரும் செப்.15 திருப்பூரில் நடைபெற உள்ள திராவிட இயக்க நூற்றாண்டுவிழா, 107 ஆவது அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

ஆனால் அவர் இந்தியாவுக்கு வர விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையைத் தகர்த்து இந்திய விசா கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் தமிழின முதல்வர் வைகோ அவர்கள். இந்த செய்தியை மலேசியாவில் உள்ள நண்பன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment