Monday, September 14, 2015

பல்லடம் கல்லூரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் கையளித்த இணையதள அணியினர்!

கொடை வள்ளல் சீர்காளி மார்க்கோனி அவர்கள் அச்சிட்ட மாநாட்டு அழைப்பு துண்டு பிரசுரம் இன்று காலை பல்லடம் பார்க் கல்லூரி மாணவ மாணவிகளுக்குவழங்கப்பட்டது. 

திருப்பூர் பார்க் கல்லூரி மாணவர்களுக்கு மாநாட்டு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வில் திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப்பில் R.R.ரவி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.முகநூலில் செய்தியை பார்த்துவிட்டு திருப்பூர் முகநூல் நண்பர் மணிகண்டன் அவர்களும் அங்கு வந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அனைவருக்கும் நன்றி.

மதியம் 12 மணியளவில் தற்போது திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு மாநாட்டு துண்டறிக்கை கொடுக்கப்படுகிறது. நிகழ்வில் 15வேலம்பாளையம் நகர துணை செயலாளர் கௌரிசங்கர் மற்றும் இணையதள நண்பர் உடுமலை சசிகுமாரும் இணைந்தனர்.

இதில் கடமையாற்றுகின்ற மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன், வைகோ கார்த்திக், அன்புக்குரிய சகோதரர் பழ.கவுதமன் மற்றும் இணையதள நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment