Sunday, September 20, 2015

தமிழீழ தமிழர்களுக்கு நீதி வேண்டி நாளை நெல்லை பேரணியில் வைகோ!

நாளை செப்டம்பர் 21 இல் ஜெனீவாவில் தமிழர் பேரணி நடைபெறுகிறபோது, ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தைச் செய்யாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலில் முன் வைக்க வலியுறுத்தவும், அதே செப்டம்பர் 21 இல் தாய்த் தமிழகத்தில் காலை 11 மணி அளவில் தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழங்களின் சார்பில், திருநெல்வேலி இரயில்வே சந்திப்பு அருகில் நடைபெறும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொள்கிறார்.

கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழீழ தமிழர்களுக்கு ஆதரவாக போர் முழக்கம் செய்ய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment