Thursday, September 17, 2015

பெரியார் பிறந்த தின நிகழ்ச்சி கலிங்கப்பட்டியில் வைகோவுடன் ராமசாமி!

மதுரையில் தங்கியிருந்த பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் பகுத்தறிவு பகலவனாம் தந்தை பெரியாரின் 137-வது பிறந்தநாளான இன்று, தமிழர் பாரம்பரியரத்தின் அடையாளமாக விழங்கும் மதுரை மாநாகரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மதிமுக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் கழக கொள்கை விளக்க அணி செயலாளர் தியாகவேங்கை பொடா அழகுசுந்தரம் தனது குடும்பத்தினருடன் ராமசாமி அவர்களை சந்தித்தார்.

பேராசிரியர் ராமசாமி அவர்கள் தலைவர் வைகோ அவர்களுடன் கலிங்கப்பட்டி போகும் வழியில் ஒரு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கலிங்கப்பட்டியை அடைந்ததும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கலிங்கப்பட்டியில் தலைவர் வைகோ இல்லத்தில் பினாங்கு துணை முதல்வர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினார். வாடகை வீட்டில் குடியிருப்பதாக கூறினார். 

No comments:

Post a Comment