Monday, September 14, 2015

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பே நிரந்தர தீர்வு குறித்து மாதிரி வாக்கெடுப்பு!

பிரஸ்சல்ஸ் நாட்டில் நடந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர், தமிழின முதல்வர் தலைவர் வைகோ அவர்களால் முன்மொழியப்பட்ட தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பே நிரந்தர தீர்வு குறித்து மாதிரி வாக்கெடுப்பு நடத்த தலைவர் வைகோ அவர்கள் அனுமதி அளித்திருக்கிறார்கள். 

எனவே நாளை திருப்பூர் பல்லடம் மதிமுக மாநாட்டு தினத்தன்று ஈழத்தில் இனப்படுகொலை புகைப்பட கண்காட்சியில் காலை மணி 9-00 முதல் மாலை 6-00 வரை மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. கழகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment