Monday, September 21, 2015

ஈழ படுகொலைக்கு சர்வதேச விசாரணைக்கு உத்திரவிட திருச்சி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்!

பேரறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு மறுமலர்ச்சி. தி்.மு.க. மாநில மகளிரணி அமைப்பாளர் Dr. ரொகையா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், திருச்சி மதிமுக சார்பில் ஈழ படுகொலைக்கு சர்வதேச விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அமைப்பாளர் வெல்லமண்டி சோமு தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் Dr. ரொகையா, புறநகர் மாவட்ட அமைப்பாளர் சேரன், மாணவரணி துணை செயலாளர் மணவைதமிழ்மாணிக்கம் மற்றும் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட கோசங்களை எழுப்பி வெற்றிக்கு வித்திட்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment