Monday, September 28, 2015

சர்வதேச விசாரணை வேண்டி கைதாகி வைகோ விடுதலை!

ஈழத்தமிழர் படுகொலைக்கு உள்நாட்டு விசாரணை போதும் என்ற அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐநாவின் மனித உரிமை ஆணைய அறிக்கையின்படி சர்வதேச விசாரணையே வேண்டும் என்று அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போரட்டம் நடந்தது.

இன்றைய அமெரிக்க தூதரக முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ எப்போதும் போல் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். கொடும்பாவிகள் கொளுத்தும் போதும் புகைப்படங்கள் கொளுத்தும் போதும் மேடையிலிருந்து கண்காணித்து கொண்டு இருந்தார். கைது நடவடிக்கையை காவல்துறை மேற்க்கொண்டவுடன், அனைவரையும் வழக்கம் போல பாதுகாப்பாக காவல்துறை வண்டியில் ஏற்றி விட்டு இறுதியாக தானும் ஏறினார் தலைவர் வைகோ.

பின்னர் எழும்பூர் மோதிலால் திருமண மண்டபத்தில் அனைவரையும் அடைத்து வைத்தனர் போலீசார். 

மண்டபத்திலிருந்தவாறே கைதான தொண்டர்களிடத்தில் பேசிய தலைவர் வைகோ அவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார். 

வெறும் 28 பேரோடு காட்டுக்குள் சென்ற தேசியத் தலைவர் பிரபாகரன் ஒன்றரை லட்சம் இந்திய ராணுவத்தை எதிர்க்கிற படையை தயாரித்தார். பங்காளி சண்டையிட்டு கொண்டு கட்சி தலைமை மீது அவதூறு சொல்லி திமுக விடமிருந்து வரவில்லை. ஈழத்திற்கு சென்று வந்த பின்பு அவதூறால் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டேன் என கூறினார்

அமெரிக்க தேசியக் கொடியையும் மற்ற அமெரிக்க-இலங்கை தலைவர்களின் படத்தையும் தயாரித்து ஆர்ப்பாட்டத்தில் கொளுத்த வேண்டும் என நேற்றிரவே திட்டமிட்டேன். ஸ்பெயின். ஸ்காட்லாந்து போன்றவை வாக்கெடுப்பால் தனி நாடாக போகிறது. அது போன்றே தமிழீழம் மலரும் என்பதைத்தான் என் இதயத்திலிருந்து சொல்லி வருகிறேன் எனவும் வைகோ தெரிவித்தார்.

நீர் மூழ்கி கப்பலை தயாரித்தது., விமானப்படைகளை வைத்திருந்தது போன்ற சாதனைகளை செய்தது விடுதலைப்புலிகள் இயக்கம். இந்திய படை தலையிடாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றிருப்பார்கள் என்றார் வைகோ.

வேலு நாச்சியார் நாடகங்கள் அரங்கேற்றப் பட்டது விடுதலை உணர்வு மேலோங்க வேண்டும் என்ற ஆசையில்தான் எனவும் கூறினார் தலைவர் வைகோ.

மாலை நேரம் ஆனதும், முறைப்படி காவல்துறை விடுதலையை அறிவித்து போராட்டக்காரர்களை விடுதலை செய்தார்கள். விடுதலையின் போது காவல்துறை அதிகாரி தலைவர் வைகோ அவர்களுக்கு நன்றி கூறினார். தலைவரும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி கூறினார். 

பின்னர் தொண்டர்கள் அவரவர் இல்லம் திரும்பியதும், தலைவர் வைகோ அவர்களும் இல்லம் திரும்பினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment