Sunday, September 20, 2015

வழி அனுப்பி வைத்தார் வைகோ! விடைபெற்றார் ராமசாமி!

திருப்பூர் 15 செப்டம்பர் 2015 அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியாவிலிருந்து வருகை தந்து சிறப்பித்த பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் மற்றும் குழுவினரை இன்று சென்னை விமான நிலைத்தில் தலைவர் வைகோ அவர்கள் அன்போடு வழியனுப்பி வைத்தார்.

விடைபெறும்போது பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்கள், தமிழகத்தில் மிக நேர்மையான, துணிச்சலான, ஒழுக்கமான தலைவர், உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் வைகோ மட்டுமே வைகோ, அவரை கைவிட்டு விடாதீர்கள். அவருக்கு உறுதுணையாக நீங்கள் அனைவரும் எப்போதும் அவர் உடன் இருங்கள் என விமான நிலையத்தில் தொண்டர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தார். உலக தலைவர்களுக்கு கூட நம் தலைவரைப் பற்றி, அவரின் நற்செயல்களை, பெருமைகளை பற்றி தெரிகிறது. ஆனால் தமிழக மக்களுக்கு தெரியாமலிருப்பது அபூர்வமே!

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment