Monday, September 21, 2015

திருப்பூரில் இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம்!

ஈழ தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தவும், தனித்தமிழ் ஈழம் பெறவும் ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருட்டினன் உட்பட, கழக உறுப்பினர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் முக்கியமாக மதிமுக இணையதள அணி நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment