Friday, September 11, 2015

குமரி பொறியாளரணி சார்பில் மது விலக்கு அரசியல் விளக்க பொதுகூட்டம்!

கன்னியாகுமரி மவட்ட மதிமுக பொறியாளரணி சார்பில் முட்டைகாட்டில் நடைபெற்ற பூரண மதுவிலக்கு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று 29-08-2015 மாலை நடைபெற்றது. 

இதில் குமரி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் சுரேஷ் குமார் பொதுக்கூடத்தை தொடங்கி தலைமை உரையாற்றினார்.

தொடர்ந்து குமரி மாவட்ட மதிமுக செயலாளர், கொள்கை வேந்தன் தில்லை செல்வம் அவர்கள், மதிமுக கொள்கை விளக்க அணி துணை செயலாளர்  புரட்சி கனல் காசிநாதன், மதிமுக தலைமை கழக பேச்சளர் சிலம்பை டென்னிசன், தக்கலை ஒன்றிய செயலாளர் JP சிங் ஆகியோர் உரையற்றினர்.

மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அ.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். ஏராளமான கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்ப்பாட்டை  குமரி மாவட்டம், தக்கலை ஒன்றியத்திற்க்குட்பட்ட, குமாரபுரம் பேரூர் மதிமுக பொறியாளர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

மதிமுக இனையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment