Friday, August 14, 2015

தஞ்சை ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து!

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், நேற்று ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று மாலை தஞ்சையில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட செயலாளர் மோகன், அரியலூரி மாவட்ட துணை செயலாளர் அண்ணன் வாரணவாசி ராஜேந்திரன் அவர்களும், தஞ்சை மாவட்ட செயலாளர் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்துகொண்டனர். ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள், கூட்டியக்கத்தின் தலைவர்கள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment