Friday, August 14, 2015

நேற்றைய மக்கள் நலன் காக்கும் ஈரோடு ஆர்ப்பாட்டத்தில் கணேஷமூர்த்தி தலமை!

நேற்று ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று மாலை ஈரோட்டில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தியாகவேங்கை கணேஷமூர்த்தி தலைமை தாங்கினார். மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி முன்னிலை வகித்தார், மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இணையதள நண்பர் தமிழீழ சோமு மற்றும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டியக்கத்தின் தலைவர்கள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment