Sunday, March 15, 2015

ராஜபக்சேவை, பிரதமர் மோடி சந்தித்தது கடும் கண்டனத்திற்குரியது!

தமிழின விடுதலைக்காக உயிர்கொடை செய்த விடுதலைபுலிகளின் மாவீரர்கள் மற்றும் அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த அரக்கன் ராஜபக்சேவை இந்திய பிரதமர் திரு.மோடி, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியா ஹவுஸ்-ல் நேற்று மாலை சந்தித்தார். இது அப்பட்டமான துரோகம். 

தமிழக தமிழகர்கள் திரு.மோடி இலங்கைக்கே போக கூடாது என்று போராட்டங்கள் நடத்துகின்ற நிலையில், அவர் ராஜபக்சே வை சந்தித்து உரையாடியிருப்பது தமிழர்களுக்கிடையே இன்னும் மனவருத்தத்தை அதிகரிக்க செய்துள்ளது. காங்கிரஸை விட பாஜக அரசு கூடுதலாக பச்சை துரோகத்தை தமிழருக்கெதிராக செய்துகொண்டிருக்கிறது. தமிழனை கருவறுக்க நினைக்கும் மோடி தமிழர்களின் வீடுகளில் சென்று பரிவு காட்டுவது போல நாடகமாடுகிறார். 

ராஜபக்சேவை சந்தித்து இருக்கிற மோடி இன்னமும் கூட்டு சேர்ந்து மீதமிள்ள தமிழர்களையும் கருவருக்க திட்டமிடுகிறார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசுக்கு ஈழ தமிழர்களின் மீது அக்கரை இல்லையென்றாலும், உபகாரம் செய்வது போல உபத்திரவம் செய்யாமலிருக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறோம். தாங்கள் இலங்கையை ஆளுகின்ற சிங்களவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல், அமைதியை கடைபிடித்தாலே, தமிழீழ மக்களே போராடி தங்களுக்கான தாயகத்தை உலக நாடுகளின் உதவியுடன் பெற்று புலிக்கொடியை பட்டொளி வீச பறக்க விடுவார்கள். 

எனவே! ஈழத்தமிழர்களை வாழவிட, இனிமேலாவது இந்திய அரசானது சிங்களவனுக்கு துணைபோகாமல் அமைதி காக்க வெண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

மதிமுக இணையதள அணி -  ஓமன்

No comments:

Post a Comment