Sunday, March 15, 2015

மசூதியை கொச்சைப்படுத்திய சு.சுவாமிக்கு கடுங்கண்டனம்!

இஸ்லாம் மக்கள் புனித தொழுகையை மசூதிகளில் நடத்துகின்றனர். அப்படிப்பட்ட புனிதமான மசூதிகளை ஆன்மீக தலங்கள் இல்லை எனவும், அது வெறும் கட்டடமே எனவும்! எப்போது வேண்டுமானாலும் இடித்து தரைமட்டமாக்கலாம் எனவும் பார்ப்பன அரசியல்வாதி பாஜகவின் கொள்கைதாங்கி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கதக்கது. 

இதில் பிரதமர் மோடி தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பேச்சு பாரத தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக இருக்கும். இதை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசையே சாரும். மேலும் இது போன்று மதத்தின் பெயரால் பிதற்றுகிறவர்களை சிறப்பு வாய்ந்த மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அரசு ஆவன செய்யவெண்டுமெனவும் கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment