Saturday, March 28, 2015

மதிமுக வாழ்நாள் உறுப்பினர் சேர்ப்பு வெளிநாட்டு தமிழர்களுக்காக!

தமிழை, தமிழினத்தை, தமிழ் நாட்டை நேசிக்கும், எனது அன்புக்கு இனிய தமிழ் உடன் பிறப்புக்களே வணக்கம்!

தமிழகத்தின் வாழ்வாதராங்களை காக்க தினமும் போராடியும், வெற்றியும் கண்டுகொண்டிருக்கின்ற ஒப்பற்ற தலைவன் வைகோவை வருகின்ற 2016 சட்டசபை தேர்தலில், முதலமைச்சராக அமர வைப்பதற்கு இப்போதே பணிகளை வேகமாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு உறுப்பினர் சேர்க்கை மிகவும் முக்கியமானது. 

எனவே ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் "வெளி நாடுகளில் வாழும்" தமிழ் உறவுகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொள்ள விரும்பினால், இப்பதிவின் கீழ், கருத்து பதிவு செய்யும் இடத்தில், தங்களின் பெயர், முழு விலாசம், வண்ண புகைப்படம் (கடவுச்சீட்டு அளவு), அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவிக்க அன்போடு கேட்டு கொள்கிறோம்.

கழகத்தின் அடிப்படை உறுப்பினராக எங்கள் மூலமாக சேர்வதற்கு "இலவசம்"
வாழ்நாள் உறுப்பினர் ஆவதற்கான கட்டணம் ₹ 500 மட்டுமே!

முக நூலில் (facebook) வெளிப்படையாக தங்களின் விபரங்களை தெரிவிக்க விரும்பாத தோழர்கள் எங்களுடைய தனிசெய்தியிலும் தங்களின் விபரங்களை தெரிவிக்கலாம்.

முகநூல் தனிசெய்தியில் தகவல்களை அனுப்ப முடியாதவர்கள் கீழ்குறிப்பிடப்படும் எண்ணை கொண்ட (whatsapp) வாட்ஸ்அப்-லும் தங்கள் முழு விவரங்களை அனுப்பி மதிமுக-வின் வாழ்நாள் உறுப்பினராகலாம்.

மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினரக சேர தகவல் அனுப்பிய முதல் இருபத்தைந்து நபர்கள் தங்களுக்கான மதிமுக வாழ்நாள் உறுப்பினர் அட்டையை, தாங்கள் தமிழகத்தில் குறைந்தது 10 பேராவது இருக்கும் பட்சத்தில், மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களின் பொற்கரங்களால் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

தொடர்புக்கு,

அலைபேசி இலக்கம்: +96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment