Tuesday, March 17, 2015

நியூட்ரினோவை எதிர்த்து வைகோ உண்ணாவிரத அறப்போர்!

நாசகார நியூட்ரினோவை எதிர்த்து, அதை தடை செய்யக்கோரி, 18.03.2015 அன்றூ காலை 9மணி அளவில், பழங்காநத்தம் - மதுரை நடராஜ் தியேட்டர் அருகில், தமிழ்நாட்டுக்காக தமிழர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஓய்வில்லாமல் உழைக்கும் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற இருக்கிறது. இதில் புதூர் மு.பூமிநாதன் - நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம், லெனின் ராஜப்பா, திருமுருகன்காந்தி - மே 17 இயக்கம், கி.வே.பொன்னையன், இராச.முகிலன், சந்திரன், இளையரசு மற்றும் பல தமிழ் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பெங்குபெறுகின்றனர். இந்த அறப்போராட்டத்தை ஆதரித்து பொதுமக்களும், விவசாய பெருங்குடி மக்களும, தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டு உண்ணாநிலை அறப்போராட்டத்தை வெற்றியடைய செய்யவெண்டுமென கேட்டுகொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment