Monday, March 30, 2015

கோவையில் தின நாளிதழ் சந்தா சேர்ப்பு-வைகோ தலைமை!

வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் தமிழகத்தில் வெளியாகவிருக்கின்ற நடுநிலை நாளேடானது இமயம் குழுமத்தில் இருந்து வெளியாகும் தினசரி பத்திரிகையாகும். இந்த பத்திரிகைக்கான வருட சந்தா செர்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. மதிமுகவின் நற்செயல்பாடுகளை அதன் செய்திகளை அனைத்து பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்து மதிமுகவினர் மக்களுக்கு செய்யும் நன்மைகளை மக்களிடத்தில் கொண்டுபோகவிடாமல் பார்த்துகொள்கின்றனர். இதனால் இமயம் குழுவினர் நடு நிலை நாளேட்டை வெளியிட்டு இருட்டடிப்பு செய்யப்படும் நற்செய்திகளையும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்கான சந்தா சேகரிப்பு நிகழ்ச்சிகளை தலைவர் வைகோ அவர்களும் துரிதமாக செய்து சந்தாக்களை சேகரித்து வருகிறார். இன்றும் கோவை மாவட்டத்திலே சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவரே சந்தா சேகரிப்பின் நிலைமையை எடுத்து கூறினார். இதில் இமயம் குழுமத்தின் நிறுவனர் இமயம் ஜெபராஜ் அவர்களும், மாநில இளைஞரணி செயலாளர் மதிப்பிற்குரிய சகோதரர் ஈஸ்வரன் அவர்களும், மற்றும் பிற முக்கிய நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பாற்றினர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக யாராவது சந்தா செலுத்த விரும்பினால், எங்களை தாராளமாக தொடர்பு கொண்டு எங்கள் மூலமாக சந்தா செலுத்தலாம் என கெட்டுகொள்ள படுகிறார்கள்.

அலைபேசி இலக்கம்;+96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment