Friday, March 20, 2015

வைகோ எதிர்ப்பால், மீத்தேன் ரத்து நடவடிக்கை,அமைச்சர் அறிவிப்பு!

மனிதகுலத்தை வேரறுக்கும் மீத்தேனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடக்கத்திலிருந்தே எதிர்த்து பலதரப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதோடு, இதை கட்சி பாகுபாடின்றி செயல்படுத்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தையும் உருவாக்கி போராடி வருகிறார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் கூறியுள்ளது போராட்டம் வெற்றி பாதையில் போய்கொண்டிருப்பதையே காட்டுகிறது.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தினருக்கு மீத்தேன் எடுப்பதற்கு தமிழ்நாட்டில் மன்னார்குடி ஏரியாவில் 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அனுமதியளிக்கப்பட்டது. இந் நிறுவனம் தேவையான ஆவணங்களை இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நினைவூட்டப்பட்ட பிறகும் அந்நிறுவனம் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதற்கான காலம் 3.11.2013 அன்றோடு முடிந்துவிட்டது. ஒப்பந்தக்காரர் இந்தப் பகுதியில் மீத்தேன் எடுக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை. ஒப்பந்த ஷரத்துகளின்படி காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

எனவே! மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் வைகோவை 2016 ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்த்தினால், அனைத்து தமிழக மக்களும் சுயமாக, நலமாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக, அறிவுஜீவிகளாக வாழலாம் என்பது நிதர்சனம். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment