Wednesday, April 1, 2015

திமுக முடக்கம்,ஜெயா வீட்டுச்சிறை,மிஞ்சியது போராளி வைகோ!

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக வின் சன் டிவி யின் ரூ742 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனை அமலாக்க பிரிவு அமல்படுத்தியுள்ளது.

திமுக, அதிமுக அரசுகள் தமிழ் நாட்டை அரை நூற்றாண்டுகளாக ஆண்டு இப்போது ஜெயில் வாசனையை நுகர ஆரம்பித்துள்ளனர். இவர்களின் மெகா ஊழல் தான் இவற்றிற்கு முக்கிய காரணமாகும்.

திமுக, அதிமுகவை விட்டால், எஞ்சி இருப்பதோ தலைவர் வைகோ மட்டுமே.... ஒரு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஆனால் மக்கள் பிரச்சினைகளை எப்போதும் போராடி பெற்று கொடுக்கிறார் மக்கள் முதல்வர் வைகோ.

மக்களே சிந்தியுங்கள். இனிமேலாவது கொஞ்சம் விழித்துகொள்ளுங்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில், தலைவர் வைகோ அவர்களை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தால், மதுவில்லா தமிழகம் கிடைக்கும். குடிநீர் இலவசமாக வினியோகிக்கப்படும். ஊழல் இல்லா தமிழகமாக மாறும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழினம் தழைக்கும். தமிழ் புத்துயிர் பெறும். தொழில் வளம் பெருகும். வருங்கால தலைமுறை பாதுகாக்கப்படும்.

"நன்றியோடு செயல்படுங்கள், வெற்றியோடு குதூகலிக்கலாம்"

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment