Sunday, April 5, 2015

புரட்சி புயலின் மௌன விரதம்!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது தந்தையார் வையாபுரி அவர்களின் நினைவுநாளான இன்று கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.
வைகோவின் தந்தையார் வையாபுரி அவர்கள் 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி காலமானார். அதிலிருந்து 41 ஆண்டுகளாக வைகோ அவர்கள் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் யாரிடமும் பேசாமலும், தண்ணீர்கூட பருகாமலும் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரச்சார காலங்களிலும்கூட அவர் மௌன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment