Thursday, April 30, 2015

தாயகத்தில் தலைவர் வைகோ மே தின சிறப்புரை!

உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் நாளை உலகெங்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

அது போல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்கமான மறுமலர்ச்சி தொழிலாளர் முண்ணனி (Marumalarchi Labour Front) சார்பாக நாளை காலை 10 மணி அளவில்,  தியாகத் தழும்பேறிய புதுவை அண்ணன் செ.முத்து அவர்களின் தலைமையில் தொழிலாளர் தின விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொண்டாடப்படுகின்றது.

இந்த விழாவில் தலைவர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். எனவே தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment