Monday, April 6, 2015

காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்கவும், மீத்தேனை முற்றிலும் விரட்டவும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும் நாளை தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. மனித சங்கிலியானது கரந்தை, தஞ்சாவூர் உமாமகேசுவரனார் சிலை அருகில் இருந்து தொடங்கி, கரந்தை தமிழ்ச் சங்கம், பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை, எம்.ஜி.ஆர்.சிலை, ரயிலடி ஆகிய இடங்களில் கூடும். 

இந்த மனித சங்கிலி போராட்டமானது மாலை 4. 00 மணி அளவில் ஒன்று கூடி, பின்னர் மாலை 5. 00 மணி முதல் மாலை 6. 00 மணி வரை மனித சங்கிலி அறப்போர் போராட்டமும், மாலை 6. 15 மணிக்கு இரயிலடி எம்.ஜி.ஆர். சிலை அருகே பொதுக்கூட்டமுமாக நடைபெறுகிறது. இதில் காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தலைவர் வைகோ மற்றும் பிற விவசாய அமைப்புகள் மற்றும் ஏனைய இயக்கங்களின் தலைவர்களும் உரை நிகழ்த்துகின்றார்கள்.

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு இப்படிபட்ட மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி அன்புடன் கெட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment