Thursday, April 23, 2015

நாளிதழ் சந்தாவிற்கு நாளை மதுரை மதிமுக கலந்தாய்வில் வைகோ!

தமிழகத்தின் காவல் அரண், மக்கள் எங்கெங்கெல்லாம் துன்பங்களை அனுபவிக்கின்றார்களோ அங்கெல்லாம் ஓடி சென்று குறை தீர்க்கும் கருணை கொண்ட கொடை வள்ளல், மதிமுக பொதுசெயலாளர், மக்கள் தலைவர் வைகோ அவர்கள் மதுரை மாநகரில் நாளை காலை 9 மணிக்கு அழகர் கோவில் சாலையிலுள்ள தமிழ்நாடு ஓட்டலில் இமயம் நிறுவனத்தார் தொடங்கவிருக்கும் நடுநிலை நாளிதழின் வருட சந்தா சேகரிப்பதற்க்கு கழகத்தினருடன் கலந்தாய்வு நடத்த வருகிறார். 

கழகத்தினரின் ஆலோசனைகள், கருத்துகள் பரிமாறப்பட்டு நாளிதழுக்கான வருட சந்தாவும் தலைவர் அவர்களால் சேகரிக்கப்படும். கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

பின்னர் காலை 11 மணி அளவில் தலைவர் வைகோ அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment