Wednesday, April 29, 2015

இளைய தலைமுறை கட்சி பொதுச்செயலாளர் இனியனுக்கு நன்றி!

20 தமிழர்கள் படுகொலை மற்றும் இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்க, "எங்கு தமிழருக்கு இன்னல் என்றாலும் ஓயாமல் போராடும் அய்யா வைகோ அவர்களை தமிழக முதல்வராக்குவோம்" என்று அனைத்து கட்சி தலைவர்கள் இருந்த, தமிழர் நீதி பேரணிக்கான பொதுமேடையில், மதிமுக பொதுசெயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களை பாராட்டி பேசியதற்கு நன்றி தெரிவிக்க, அனைத்து மாணவ மன்றங்களை இணைத்து, புதிதாக துவங்கப்பட்ட இளைய தலைமுறை கட்சியின் பொது செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் திரு.இனியன் ஜாண் அவர்களை தொடர்புகொண்டேன். 

அப்போது தலைவர் வைகோ அவர்களை பாராட்டி பேசியதற்கு நன்றியையும், இளைய தலைமுறை கட்சிக்கு  வாழ்த்துதலையும் தெரிவித்தேன். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்து விட்டு பின்வருவனவற்றை என்னிடத்தும் சுட்டிக்காட்டினார்.

"வைகோ தமிழகத்தை ஆளும் நாளே நம் இனத்தின் விடியல்"

இதை கேட்டமாத்திரத்தில் இன்னும் மகிழ்ச்சியில் நானிருக்க, எப்போதும் தொடர்பிலிருங்கள் என்று சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன். 

தோழர்களே!!! 

தனி கட்சிகளாக தமிழர்களின் நலனுக்காக களம் காணுகிறவர்களும், தலைவர் வைகோ அவர்கள் தமிழினத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் என்று கண்கூடாக கண்டு, தலைவரின் தலைமைத்துவத்தை பாராட்டுகிறார்கள். எனவே மதிமுக தொண்டர்களகிய நாம் இன்னும் வேகமாக 2016 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஆயத்தப்படுத்துவோம். தலைவர் வைகோவை முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர வைப்போம். தமிழகத்தை தொடர்ந்து காப்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல் 
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment