Saturday, April 11, 2015

தமிழின அடிமை விலங்கு உடைபடுமா?

கடலுக்குப்போனால் இலங்கைக்காரன் சுடுகிறான்!
காட்டுக்குப்போனால் ஆந்திரக்காரன் சுடுகிறான்!
தண்ணீருக்குப் போனால் கர்நாடகக்காரன் விரட்டுகிறான். 
தமிழருக்கான அணையை கேட்டால் கேரளாக்காரன் மிரட்டுறான்.
எங்குப்போனாலும் தமிழன் நிலை இதுதானா...
இது எப்போது மாறும்? தமிழனுக்கு எப்போது தன்மானம் வரும்?
தமிழின அடிமை விலங்கு எப்போது உடைத்தெறியப்படும்...

விடை இருக்கிறது தமிழக மக்களே உங்கள் முன்னாலே...

அந்த விடை தான் "தலைவர் வைகோ"

அவரை வருகிற 2016 ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வைத்து புனிதா ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பினால், தமிழர்கள் மதிக்கப்படுவார்கள். தமிழினம் காக்கப்படும். தமிழனின் வாழ்வாதாரம் செழிக்கும், தமிழக வருங்கால தலைமுறை பாதுகாக்கப்படும். இவையனைத்தும் வைகோ என்ற மனிதனால் மட்டுமே சாத்தியம். 

எனவே தமிழக மக்களே சிந்தியுங்கள். உங்களை இப்போதே தயார்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது வாக்குகளை பம்பரம் சின்னத்தில் பதிவு செய்து மதிமுக வை பெருவாரியான இடங்களில் தேர்ந்தெடுத்தால் தமிழர்கள் உலக அளவில் பேசப்படுவார்கள், தமிழீழம் சாத்தியமாகும்...

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment