Monday, April 27, 2015

தமிழர் நீதிப் பேரணிக்கு பெருந்திரளாய் வாருங்கள்!

20 அப்பாவி தமிழ் கூலித் தொழிலாளர்களை செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என பொய் குற்றச்சாட்டின் பேரில் அழைத்து சென்று படுகொலை செய்தது அம்பலமான நிலையில் 20 பேர் படுகொலைக்கு நீதி வேண்டி நாளை ஏப்ரல் 28 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.00 மணியளவில் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகையிலிருந்து இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடக்க இருக்கிறது.
 
இந்த மக்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் அணி அணியாய் திரண்டு வந்து, வீரியமிக்கதாக மாற்றி சென்னையையே குலுங்க செய்யவேண்டும். டெல்லி அதிரும்படி செய்ய வேண்டும். பிரதம அலுவலகத்தின் காதுகளுக்கு உரைக்கும்படி ஒலிக்க வேண்டும். எனவே தமிழர்களே...
 
வாருங்கள் அலைகடலாய்...
போராடுவோம், நீதியை பெறுவோம்...
 
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment