Friday, April 24, 2015

மதுரையில் தினசரி நாளிதழ் சந்தா சேகரிப்பதற்காக வைகோ!

மதுரை மாநகரில் இன்று காலை 9 மணிக்கு அழகர் கோவில் சாலையிலுள்ள தமிழ்நாடு ஓட்டலில் இமயம் நிறுவனத்தார் தொடங்கவிருக்கும் நடுநிலை நாளிதழின் வருட சந்தா சேகரிப்பதற்கு கழகத்தினருடன் கலந்தாய்வு நடத்த மதிமுக பொதுசெயலாளர், மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வந்தார்கள். 

கழகத்தினரின் ஆலோசனைகள், கருத்துகள் பரிமாறப்பட்டு நாளிதழுக்கான வருட சந்தாவும் தலைவர் அவர்களால் சேகரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டார்கள்.

செய்தியாளர் சந்திப்பு:-
பின்னர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள், ஆந்திராவில் 20தமிழர்கள் படுகொலை செய்யபட்டது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெற கொடூர செயல். இது சம்மந்தமாக மத்திய அரசு கண்டுகொள்ளதாதது கண்டனத்திற்க்கு உரியது. உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் மத்திய புலனாய்வு பிரிவு அனைத்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும். தமிழக அரசு உண்மையை கண்டறிய ஆந்திர அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது கண்டனத்திற்க்குரியது ! என தனது கண்டனத்தையும் செய்தியாளர்கள் மூலமாக தெரிவித்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment