Thursday, April 30, 2015

தலைமகன் வைகோவின் திருவாசக விவரிப்புகள்!

திருவாசகம் 51 தலைப்புகளை கொண்டது... 656 அல்லது 658 பாடல்கள் என்று சொல்வார்கள்... இந்த 51 தலைப்புகளில் பத்து பத்து பாட்டாக 19 பத்துகள் இருக்கின்றன... ஒரு அதிகாரத்துக்கு குறள்கள் பத்து ... மோசசின் கட்டளைகள் பத்து...

சங்க இலக்கியங்களில் பத்து பாட்டு என்பது...
"முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பொருனர் ஆற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை, நெடுனல்வாடை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்." என்ற பத்து நூல்கள் உள்ளன...

அதை போலத்தான் திருவாசகத்தில் 51 தலைப்புகளில் 19 பத்துகள் இருக்கின்றன.....
அச்சப் பத்து, அடைக்கலப்பத்து, அருள்பத்து, அதிசிய பத்து, அற்புதப் பத்து, அன்னைப்பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிபத்து, கண்ட பத்து, குயில்பத்து, குலாபத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து, சென்னிப்பது பிடித்த பத்து, பிரார்த்தனைபத்து, புணர்ச்சிப் பத்து, யாத்திரைப்பத்து, வாழாப்பத்து........

இப்படி அடுக்கி செவிகளுக்கு விருந்தளித்து புருவங்களை உயர் வைத்தவர் யார் தெரியுமா....

தமிழ்... தமிழின உயர்வு, தமிழின வாழ்வாதாரம் என வாழ் நாள் முழுதும் சிந்திக்கும் எங்கள் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் ....

(செய்தி சேகரிப்பு : அம்மாபேட்டை கருணாகரன், இளையராஜாவின் திருவாசக இசை வெளியீட்டு விழாவில்....)

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment