Saturday, September 3, 2016

நெல்லை மதிமுக மகளிரணி கூட்டத்தில் 300 புதிய மகளிர் இணைந்தனர்!

மதிமுகவின் தென் மாவட்டங்களுக்கான மகளிரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்வு இன்று 03.09.2016 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் திருநெல்வேலி ஹோட்டல் லாரா பேரடைஸ் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.

இதில் மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோஹையா தலைமை வகித்தார். நம் இயக்கம் சட்டசபைதேர்தலை வெற்றிவாய்ப்பை இழந்துஇருக்கும் இந்த நேரத்தில் 300 மகளிர் மதிமுகவில் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு நம் இயக்கத்தில் சேர்கிறேன் என்று சொன்னவர்கள்தான் இவர்கள். தேர்தல் வெற்றிதோல்வி இவர்களின் முடிவை மாற்றவில்லை. பணம் பதவிக்கு அப்பாற்ப்பட்டு இயக்கப்பிடிப்பு இருப்பவர்கள எல்லா காலத்திலும் இருக்கின்றார்கள் என தலைவருடன் உரையாடியிருக்கிறார் மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோஹையா. அதற்கு மகிழ்ச்சி என தலைவர் தெரிவித்திருக்கிறார்.

தகவல்: மருத்துவர் ரோஹையா

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment