Monday, September 12, 2016

தனது வாகனத்தில் பலியான சக்திவேல் குடும்பத்துக்கு வைகோ ஆறுதல்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் வாகனம் உதவியாளர்கள் மற்றும் ஓட்டுனருடன் 10-09-2016 இரவில் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது உழுந்தூர்பேட்டை பகுதியில், சக்திவேல் என்பவர் வாகனத்தின் குறுக்கே திடீரென சைக்கிளில் வந்து மோதியதில் உயிரிழந்தார்.

அப்போது திருச்சியில் இருந்த வைகோ அவர்கள் சம்பவத்தை கேள்விபட்டு இன்று 12-09-2016 உளுந்தூர்பேட்டை வண்டிப்பாளையம் சக்திவேல் வீட்டிற்குச்சென்று துக்கம் விசாரித்த, ஆறுதல் கூறியதுடன், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, மேலும் காப்பீடுத்தொகை பெற்று தருவதுடன் அந்த குடும்பத்தின் நலனில் எந்நாளும் அக்கறை கொண்டவனாக இருப்பேன் என்று ஆறுதல் கூறினார். 

ஓமன் இணையதள அண் சார்பில் சக்திவேல் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment