Monday, September 26, 2016

81 ஆவது பிறந்த நாளில் சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் வைகோ மரியாதை!

கடந்த 24-09-2016 அன்று பா.சிவந்தி ஆதித்தனாரின் 81 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலிங்கப்பட்டியில் இருதய மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினார். 

இலவச மருத்துவ சோதனை முகாமை முடித்து சென்னை திரும்பிய வைகோ அவர்கள், இன்று 26-09-2016 மதியம் 1:40 மணிக்கு போயஸ்கார்டனிலுள்ள பா.சிவந்திஆதித்தன் அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் சிவந்தி ஆதித்தனார் மகனும் இருந்தார். மேலும் மதிமுக கழக முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment