Wednesday, September 28, 2016

காவிரி ஆற்று மணல் குவாரிகளை ரத்து செய்ய வைகோ பங்கேற்க்கும் உண்ணா நிலை போராட்டம்!

காவிரி ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை 29-09-2016 வியாழன் அன்று உண்ணாநிலை அறப்போராட்டம் நடக்கிறது. 

இந்த உண்ணா நிலை அற போராட்டத்தை முடித்து வைத்து தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். 

இந்திய பொதுவுடமை கட்சி நல்லக்கண்ணு, திருமாவளவன், டி.கே.ரங்கராஜன், இனமான நடிகர் சத்தியராஜ், வானதி சீனிவாசன், கோவை ராமகிருஷ்ணன், பாமக வழக்கறிஞர் பாலு, காங்கிரஸ் ஜோதிமணி உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். 

கழக கண்மணிகளும், காவிரி ஆற்றின் மேல் பற்றுள்ள தமிழர்களும் கலந்துகொண்ண்டு போராட்டத்தை வெற்றியடைய செய்வதன் மூலம் தமிழக இந்திய அரசுகளை மணல் கொள்ளையை தடுக்க செய்யவும், காவிரி நீரை தமிழகத்திற்கு விட வைக்கவும் முடியும். 

எனவே ஏராளமாக கலந்துகொண்டு வாழ்வாரத்தை காக்குமாறு அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment