Tuesday, September 6, 2016

வைகோ அறிவுரையை ஏற்று கழக கண்மணி சரவணனின் உடல் தானம்!

தூத்துக்குடி தெய்வச்செயல்புரத்தை சேர்ந்த கழகக் குடும்பத்து கண்மணி சரவணன் (வயது24), விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து தலைவர் வைகோ அவர்கள், சரவணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உடல் உறுப்பு தானம் செய்ய வழங்கிய அறிவுரையை, சரவணனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து உடல் தான ஏற்பாடுகள் நெல்லை கிட்னிகேர் சென்டரில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட செயலாளர் கேஎம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒ.செ.சரவணன், ப.கல்லத்தியான், பாளை வெற்றிவேந்தன் மற்றும் கழகதோழர்கள் பத்திரிக்கையாளர்கள் திரண்டனர்.

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் மற்றும் கண்கள் தானம் பெறப்பட்டது.

உலகினை உற்றுநோக்கும் சரவணன், மங்கா புகழ் வாழ்க...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment