Sunday, September 25, 2016

தமிழீழத்தில் "எழுக தமிழ்" எழுச்சி பேரணி!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் முற்றவெளியில் ‘எழுக தமிழ்‘ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் நேற்று 24-09-2016 அன்று திரண்டெழுந்தனர். தமிழ் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கின்ற சிகப்பு மஞ்சள் கொடியை ஏந்தியவாறு எழுச்சி பேரணியில் கலந்துகொண்டனர். 

தமிழர்களின் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை சிங்கள கொட்டம் அறிந்திருக்கும். அற வழியில் தொடங்கிய போராட்டம், ஆயுதமேந்த நிர்பந்தப்படுத்தப்பட்டு, மீண்டும் அனைத்து தமிழீழ மக்களாலும் அற வழியிலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழீழ புலிக்கொடி ஐநா முன்றலில் பட்டொளி வீசி பறக்கும் நாள் வரை தமிழர்களின் தாகங்கள் தணியாமல் போராட்டம் நடபெற்றுக்கொண்டேதான் இருக்கும்.

தமிழீழத்தினை வென்றிட.... எழுக தமிழினமே...

தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment