Thursday, September 29, 2016

காவிரி மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ப்பு!

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று 29-09-2016 கரூர் வேலாயுதம்பாளையத்தில் மணற் கொள்ளைக்கு எதிராக உண்ணாநிலை போராட்டம் நடந்தது. இதில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

உண்ணாநிலை போராட்டத்தின் இறுதி நிகழ்வாக வைகோ அவர்கள் நிறைவு பேருரை ஆற்ற வந்த போது, அது வரை பொருத்து இருந்த கரிய மேகங்கள் அடர் மழையாய் கொட்ட ஆரம்பிக்க மழையின் வேகம் கூடியது. இடியாய் முழங்கினார் வைகோ. 

காவிரி பிரச்சனை குறித்து புள்ளி விவரங்களோடு உரையாற்றினார். மணற் கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

காவிரி நீர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சகோதரர் விஸ்வநாதனை மணற் கொள்ளையர்கள் வீடு தேடி வந்து மிரட்டல் விடுத்து சென்றதாக சொன்னார்கள். 

நான் விஸ்வநாதனை இந்த தகவல் அறிந்து தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவரிடம் சொன்னேன், நான் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் வந்து தங்குகிறேன் என்றேன். 

யார் மிரட்ட முடியும். இது விஸ்வநாதனுக்கான மிரட்டலாக எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவில் இருந்த விஸ்வநாதன் பல ஆண்டுகளுக்கு பிறகு தாய் மண்ணிற்கு வந்து குடியேறி இருக்கிறார். தமிழர்களுக்காக உழைக்கிறார். காவிரி மணற் கொள்ளை பிரச்சனையில் முன்னின்று போராடுகிறார். 

அவருக்கு ஊறு விளைவிக்க நினைக்கும் குண்டர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அவரின் பின்னால் நாங்கள் இருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள். என்ன செய்துவிட முடியும் என உணர்ச்சிபூர்வமாக வைகோ உரையாற்றினார். 

உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு பழச்சாறு கொடுத்து நிறைவு செய்து வைப்பது வழக்கம். ஆனால் மழையே அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டது. உங்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்து இருக்கிறது என்றார். 

உண்ணாவிரத பந்தலில் வைகோ. நல்லக்கண்ணு, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, தமிழ் புலிகள் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தலைவர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

வைகோ அவர்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து விட்டு கலிங்கப்பட்டி நோக்கி புறப்பட்டார். மாவட்ட எல்லையில் நிர்வாகிகள் தலைவரை வழி அனுப்பி வைத்தனர். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment